டெல்லி ; ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்முதல், வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முந்தைய கலால் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய கலால் கொள்கை கடந்த ஆண்டு நவம்பரில் அமலுக்கு வந்தது.
இதில், மதுபான தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள், வரி விலக்குள்ள அளிக்கப்பட்டு வருப்பதாகவும், இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐ, மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி, ‘லாக்கர்’களை சோதனையிட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கட்சியினர், மதுபான அதிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், மணீஷ் சிசோடியா உட்பட 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக இன்று காலை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் அவரை சிபிஐ கைது செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியேந்தர் ஜெயின், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.