திருப்பதி : சேசாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய பின் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் பயணித்த தமிழ்நாடுஅரசு பேருந்து ஆந்திராவில் பறிமுதல் செய்து ஓட்டுநர்,நடத்துனரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
திருப்பதியில் இருந்து பயணிகளுடன் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்றை சந்திரகிரி போலீசார் நேற்று இரவு திருப்பதி -சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் பயணித்து கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 36 பேர் திடீரென்று பேருந்தில் இறங்கி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
திருமண கோஷ்டி போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்ததால் அனைவரும் செம்மரங்களை வெட்டுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று போலீசார் கருதுகின்றனர்.
எனவே செம்மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தை பறிமுதல் செய்த சந்திரகிரி போலீசார்,பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.