சீட்டு கட்டுப் போல சரிந்த இலங்கை அணி விக்கெட்டுகள்.. சீறிப் பாய்ந்த சிராஜ் : உலக சாதனை படைத்த இந்தியா!!!
ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் சிராஜ் மட்டும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
முதல் ஓவரிலேயே குஷல் பெரேரா விக்கெட்டை பும்ரா எடுத்தார். அதன்பின் 4வது ஓவரில் 1 பந்தில் ஒரு விக்கெட், 3 மற்றும் 4வது பந்தில் தலா ஒரு விக்கெட், கடைசி பந்தில் ஒரு விக்கெட் என்று சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் 6வது ஓவரில் மீண்டும் சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தார்.
இந்த 4வது ஓவரின் 5வது பந்தில் ஹாட் டிரிக் எடுக்க வேண்டிய நிலையில் சிராஜ் பவுண்டரி கொடுத்தார். இந்த பந்தை பிடிக்க சிராஜ் ஸ்பிரிண்ட் செய்து ஓடியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இதை பார்த்து கோலி மைதானத்தில் குலுங்கி குலுங்கி சிரித்தார். அவரை பார்த்து சுப்மான் கில்லும் குலுங்கி குலுங்கி சிரித்தார். இந்த காட்சிகள் வைரலாகி உள்ளன.
12 ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது. இதில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.