கர்நாடகா: உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீனின் உடலை அவரது பெற்றோர் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 1ம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் எதிர்பாராத விதமாக கர்நாடக மாநிலம் சலகேரியைச் சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். நவீன் கார்கிவ் நகரில் செயல்படும் மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.
மார்ச் 1ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்ற போது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானார். அவரது உடல் பதப்படுத்தப்பட்டு கார்கிவ் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மாணவரின் உடலை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
அவரது உடலை இந்தியா எடுத்துவர வெளியுறவுத்துறை தீவிர முயற்சியில் இறங்கியது. அதன் பலனாக மாணவர் நவீனின் உடல் இன்று காலை 3.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. நவீன் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நவீனின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிப்பதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை சேகரப்பா கவுதார் கூறுகையில், ‘மருத்துவத் துறையில் சாதிக்க வேண்டும் என்று மகன் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. இப்போது அவரது உடல் மற்ற மாணவர்களின் கல்விக்கு உதவட்டும்.
மகனின் உடலையாவது பார்க்கிறோம் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. மேலும், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நவீன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். நவீனின் உயிரிழப்புக்கு இழப்பீடாக கர்நாடக அரசு ரூ. 25 லட்சத்திற்கான காசோலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்று கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.