ஆந்திரா: திருப்பதி அருகே நெல்லூரில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நெல்லூரில் நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூரில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 168 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 கிலோ மீட்டர் நிலத்திற்கு அடியில் ஆழத்தில் நள்ளிரவு 1.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.