Categories: இந்தியா

ஓடும் ரயிலில் செல்போன் பறித்த இளைஞர்: திருடனை துரத்தி சென்ற ஆசிரியர் ரயில் மோதி பரிதாப பலி…!!

மத்தியபிரதேசம்: தனது செல்போனை திருடிச் சென்ற நபரை துரத்திச் சென்ற ஆசிரியர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷதோல் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் நேமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று பணி முடிந்து, தனது சொந்த ஊரான சாகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 7 மணியளவில் அவருடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர், மனோஜ் நேமாவிடம் செல்போனை கேட்டுள்ளார். தனது நண்பருக்கு அவசரமாக தகவல் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியதால், மனோஜ் நேமாவும் செல்போனை கொடுத்திருக்கிறார்.

அதை வாங்கி பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர், ரயிலின் வேகம் சற்று குறையவே, செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதை பார்த்த மனோஜும் ரயிலில் இருந்து குதித்து அவரை துரத்திச் சென்றார். அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் நேமா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

36 minutes ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

46 minutes ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 hour ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

2 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

3 hours ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

3 hours ago

This website uses cookies.