மத்தியபிரதேசம்: தனது செல்போனை திருடிச் சென்ற நபரை துரத்திச் சென்ற ஆசிரியர் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷதோல் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் நேமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று பணி முடிந்து, தனது சொந்த ஊரான சாகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 7 மணியளவில் அவருடன் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர், மனோஜ் நேமாவிடம் செல்போனை கேட்டுள்ளார். தனது நண்பருக்கு அவசரமாக தகவல் ஒன்றை தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியதால், மனோஜ் நேமாவும் செல்போனை கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கி பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர், ரயிலின் வேகம் சற்று குறையவே, செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். இதை பார்த்த மனோஜும் ரயிலில் இருந்து குதித்து அவரை துரத்திச் சென்றார். அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்த ரயில் அவர் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் நேமா உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.