திருப்பதி: காளஹஸ்தியில் ரிவர்ஸ் எடுக்கும் போது சுவர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் தமிழக பக்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார்,
தர்மபுரியை சேர்ந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் குடும்பத்துடன் காளகஸ்தி கோவிலுக்கு இன்று காலை வந்து இருந்தனர். சாமி கும்பிட்ட பின் அவர்கள் காளஹஸ்தியில் உள்ள டூரிஸ்ட் பேருந்து நிலையம் அருகே சுவர் ஓரத்தில் உட்காரந்திருந்தனர்.
அப்போது தனியார் பேருந்து ஒன்றை அதன் ஓட்டுனர் ரிவர்ஸ் எடுத்தார். பின்னால் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக சுவரின் மீது மோதி அந்த சுவர் இடிந்து அங்கு உட்கார்ந்து இருந்த விஜயன், முனியப்பன், காமராஜ் ஆகியோர் மீது விழுந்தது.
இந்த விபத்தில் விஜயன் இடிபாடுகளில் சிக்கி மரணம் அடைந்தார். முனியப்பன், காமராஜர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறியும் அங்கு வந்த காளகஸ்தி போலீசார் காயமடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மரணம் அடைந்த விஜயின் உடல் காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள காளஹஸ்தி போலீசார் வழக்கு பதிவு செய்து சுற்றுலா பேருந்து ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.