பிரான்சில் முடக்கப்பட்ட விமானம் 4 நாட்களுக்கு பிறகு, 276 பயணிகளுடன் இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தது.
கடந்த வியாழக்கிழமை துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவாவுக்கு 303 இந்திய பயணிகள் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதனிடையே, எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா? என்று பரிசோதிப்பதற்காகவும் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அப்போது, விமான நிலையம் வந்த பிரான்ஸ் போலீசார், துபாயில் இருந்து ஒரே சமயத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிக்கராகுவா நாட்டிற்கு செல்வது குறித்து சந்தேகமடைந்தனர். மேலும் விமானப் பயணிகளிடம் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். முடிவில், விமானத்தில் பயணித்த அனைவரும் உரிய அனுமதி பெற்றதும், மனித கடத்தல் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, விமானத்தை விடுவிக்க பிரான்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்தது. விமானத்தில் பயணித்த பயணிகளில் 25 பேர் பிரான்சில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்தனர். எனவே, அவர்களை தவிர்த்து எஞ்சிய பயணிகளுடன் மீண்டும் விமானம் நிக்கராகுவா நாட்டிற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கப்பட்ட விமானம் இந்தியாவுக்கு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 276 இந்தியர்களுடன் பிரான்சில் நேற்று புறப்பட்ட விமானம், இன்று அதிகாலை 4 மணியளவில் இந்தியா வந்தது. மும்பை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.