ஆந்திரா : கும்பலாக வீட்டுக்குள் புகுந்த இளைஞர்கள் மென்பொருள் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மீது இரண்டு நாட்களுக்கு முன்னர் இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பலமனேர் பாத்த பேட்டை போலீஸ் லைன் பகுதியில் வசித்து வருபவர் நிரஞ்சன். மென்பொருள் பொறியாளரான இவர் வொர்க் பிரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்குள் புகுந்த சில இளைஞர்கள் சுத்தியால் அடித்தும் கால்களால் உதைத்தும் கண்மூடித்தனமாக நிரஞ்சன் மீது தாக்குதல் நடத்தினர். இதில் தீவிர காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டில் புகுந்த சில இளைஞர்கள் என்னை கண்மூடித்தனமாக தாக்கி வீட்டை உடனடியாக காலி செய்து செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததாக
நிரஞ்சன் செல்பி வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து பலமனேர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.