தெலுங்கானா: நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் கருகி இறந்தனர்.
தெலுங்கானா மாநிலம் மஞ்ரியலா மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா பத்மபதியா தம்பதியினர் வசித்து வந்தனர் . அவர்களது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் இரண்டு பேர் இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
ஆறு பேரும் நேற்று இரவு சாப்பிட்ட பின் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு தாண்டிய பின் அந்த வீடு திடீரென்று தீப்பற்றி எறிய துவங்கியது.
இதனை கவனித்த அருகில் வசிப்பவர்கள் தீயை அணைத்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறு பேரும் உடல்கள் கருகி மரணம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த மஞ்சிரியாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். ஆறு பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது கதவை தாழிட்டு வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தீ விபத்தில் மரணமடைந்தவர்கள் விவரம்:
சிவையா (50),பத்மா (45), மௌனிகா (35), ஹீம பிந்து (2), ஸ்வீட்டி (4), சந்தையா (40).
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.