காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!!
உத்தரபிரதேச மாநிலம் சுல்தார்பூரில் வசிப்பவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை லக்னோ-பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் ராகுல் மிஸ்ரா, தனது மனைவியை காருக்குள் தனது குழந்தைகளுக்கு முன்னால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
விசாரணையின்போது, அந்த நபர் தனது மனைவி மோனிகா குப்தா மீது சந்தேகப்பட்டு வந்ததாகவும், அதனால் அவரைக் கொன்றதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் ரோந்து குழு சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகள் அன்ஷிகா (12) மற்றும் மகன் அதர்வா (6) ஆகியோரையும் கொன்றிருக்கலாம் எனவும் அதிகாரி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.