காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 4:58 pm

காருக்குள் குழந்தைகள் முன்னே மனைவியின் கழுத்தை நெறித்த கணவன்… பதற வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தார்பூரில் வசிப்பவர் ராகுல் மிஸ்ரா. இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை லக்னோ-பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் ராகுல் மிஸ்ரா, தனது மனைவியை காருக்குள் தனது குழந்தைகளுக்கு முன்னால் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின்போது, அந்த நபர் தனது மனைவி மோனிகா குப்தா மீது சந்தேகப்பட்டு வந்ததாகவும், அதனால் அவரைக் கொன்றதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் ரோந்து குழு சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகள் அன்ஷிகா (12) மற்றும் மகன் அதர்வா (6) ஆகியோரையும் கொன்றிருக்கலாம் எனவும் அதிகாரி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?