இந்தியில் தயாராகி இந்தி உட்பட, தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் என 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி கேரளா ஸ்டோரி. படத்திற்கு முன்னோட்டமாக வந்த ட்ரைலர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது, கேரளாவில் விடுதியில் தங்கி பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவி தன்னுடன் பயிலும் சக மாணவிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார். அதன் பின்னர் அவர்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துகொள்கிறார்கள்.
திருமணத்தையடுத்து சிரியாவுக்கு செல்லும் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று ட்ரைலர் கூறுகிறது. இந்த திரைப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்து கண்டனம் தெரிவித்த கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது.
சங்பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்டது படம்தான் இந்த ‘தி கேரள ஸ்டோரி. கேரளாவில் காலூன்ற நினைக்கும் சங் பரிவார் கும்பல், தற்போது லவ் ஜிகாத் என்கிற விஷயத்தை கையில் எடுத்திருக்கிறது.
ஆனால் நீதிமன்றம், விசாரணை அமைப்புகள், மத்திய உள்துறை அமைச்சகம் கூட லவ் ஜிகாத் என்று ஒன்று கிடையாது என நிராகரித்துள்ளது. ஆனால் இதனை பரப்ப இந்த திரைப்படத்தை சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். அதேபோல எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கேரளாவில் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என எதிர்பார்த்த நிலையில், தமிழக உளவுத்துறை அரசுக்கு ஓர் எச்சரிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி கேரள ஸ்டோரி படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்வும், அது தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் சர்ச்சை எழும் வாய்ப்புள்ளது எனவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.