சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அமராவதி அருகே தத்தவாடா கிராமத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறியது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. அந்த லாரி தத்தவாடா கிராமம் சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் நேற்று நள்ளிரவு நேரத்தில் வெடித்து சிதறின. தீ விபத்து ஏற்பட்ட உடன் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த தீ விபத்து காரணமாக அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், அருகில் இருந்த கிராம மக்கள் ஆகியோர் கடும் அச்சமடைந்தனர். சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சத்தம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வரை கேட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி தீயை அணைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.