சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அமராவதி அருகே தத்தவாடா கிராமத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்து சிதறியது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது. அந்த லாரி தத்தவாடா கிராமம் சமீபத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் நேற்று நள்ளிரவு நேரத்தில் வெடித்து சிதறின. தீ விபத்து ஏற்பட்ட உடன் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த தீ விபத்து காரணமாக அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், அருகில் இருந்த கிராம மக்கள் ஆகியோர் கடும் அச்சமடைந்தனர். சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சத்தம் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வரை கேட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி தீயை அணைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.