கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்ற விவசாயியை உதாசீனப்படுத்திய மேலாளருக்கு விவசாயி தக்க பதிலடி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் பிக்கப் டிரக் வாங்க விவசாயி கெம்பேகவுடா என்பவர் சென்றுள்ளார். விவசாயியின் எளிமையான தோற்றத்தை பார்த்த மேலாளர் அவரை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
‘உன்கிட்ட எல்லாம் 10 ரூபாய் கூட இருக்காது. நீ கார் வாங்க வந்துட்டியா?’என விற்பனையாளர் விவசாயியை சற்றும் யோசிக்காமல் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி கெம்பேகவுடா ‘என்னையே அசிங்கப்படுத்திட்டியா. இந்தா இரு வாரேன்’ என ஷோரூமை விட்டு வெளியே சென்றுள்ளார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கார் ஷோரூமிற்கு வந்த விவசாயி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். அப்படி அந்த விவசாயி என்ன செய்தார் தெரியுமா?….கார் வாங்க தேவையான ரூ.10 லட்சத்தை சுளையாக எடுத்து வந்து மேலாளரிடம் நீட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விவசாயி தனது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் இதில் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இறுதியாக விற்பனையாளர் விவசாயியிடம் மன்னிப்பு கோரியதை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது. விவசாயி விற்பனையாளரை திட்டிக்கொண்டே “இவ்ளோ பேசினதுக்கு அப்புறம் நான் உன் கடையில கார் வாங்க மாட்டேன்” என கூறி ரூ.10 லட்சத்துடன் கெத்தாக வெளியேறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் மஹிந்ரா ஷோருமில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.