ஆந்திரா : விஜயவாடா அருகே தவறான பாதையில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது அரசு பேருந்து உரசி சென்ற நிலையில் பெண் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயவாடாவில் போக்குவரத்து விதிகளை மீறி ராங் ரூட்டில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது எதிரில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து லேசாக மோதி சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண் பேருந்தில் ஏறி சுமார் அரை மணி நேரம் ஓட்டுனர் மீது சாமியாடி தீர்த்துவிட்டார். அப்போது பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, தாக்கி, உதைத்து தன்னுடைய வீரத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் உட்பட பலர் எடுத்துக்கூறியும் அவர் தன்னுடைய தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்தநிலையில் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் மேலும் தன்னுடைய குரலை உயர்த்தியவர் டிரைவரை காலால் உதைத்து, சட்டையை பிடித்து இழுத்து கீழே இறங்குடா என்று முன்னைவிட வேகமாக சப்தம் போட்டார்.
இந்த நிலையில் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.