ஆந்திரா : விஜயவாடா அருகே தவறான பாதையில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது அரசு பேருந்து உரசி சென்ற நிலையில் பெண் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
விஜயவாடாவில் போக்குவரத்து விதிகளை மீறி ராங் ரூட்டில் ஸ்கூட்டியில் வந்த பெண் மீது எதிரில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து லேசாக மோதி சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண் பேருந்தில் ஏறி சுமார் அரை மணி நேரம் ஓட்டுனர் மீது சாமியாடி தீர்த்துவிட்டார். அப்போது பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, தாக்கி, உதைத்து தன்னுடைய வீரத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் உட்பட பலர் எடுத்துக்கூறியும் அவர் தன்னுடைய தாண்டவத்தை நிறுத்தவில்லை. இந்தநிலையில் தகவல் அறிந்து அங்கு போலீசார் வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் மேலும் தன்னுடைய குரலை உயர்த்தியவர் டிரைவரை காலால் உதைத்து, சட்டையை பிடித்து இழுத்து கீழே இறங்குடா என்று முன்னைவிட வேகமாக சப்தம் போட்டார்.
இந்த நிலையில் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.