கடந்த 10 நாட்களில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் மூலம் திருப்பதி கோவிலுக்கு 40 கோடியை 25 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று ஒன்றாம் தேதி இரவு 12 மணிக்கு அடைக்கப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருந்த கடந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கும் சேர்த்து 7 லட்சத்து 76 ஆயிரத்து 930 பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 390 சுவாமி பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை.
கூடுதலாக தேவஸ்தான ஊழியர்களின் பரிந்துரை அடிப்படையில் 37 ஆயிரத்து 668 பேருக்கும், அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் அடிப்படையிலும், முக்கிய பிரமுகர்களுக்கும் 66 ஆயிரத்து 998 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. வைகுண்ட ஏகாதசி பத்து நாட்களில் 40 கோடியே 25 லட்ச ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைக்கப்பெற்றது. அதேபோல், 35 லட்சத்து 60 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.