திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடந்து செல்லும் அலிபிரி மலைப்பாதையில் கரடி வந்ததால் பக்தர்கள் பீதியடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்வது வழக்கம். அவ்வாறு நடந்து செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கரடி ஒன்று மான் பூங்கா எதிரே உள்ள நடைபாதையில் வனப்பகுதியில் இருந்து வந்தது. இதனை பார்த்த பக்தர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் சிறுத்தை இதே நடப்பாதையில் வந்து நான்கு வயது சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்டு சென்றது. இந்நிலையில், தற்போது நடைபாதையில் கரடி வந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.