திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.3.096 கோடியில் 2022 -23 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு திருப்பதி மலையில் இன்று கூடியது. திருப்பதி மலையில் உள்ள அன்னமைய்யா கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் 2022- 23 நிதியாண்டிற்கான 3096 கோடி ரூபாய் பட்ஜெட்டை தேவஸ்தான அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதற்கு ஒப்புதல் அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, 2021-22 நிதியாண்டில் 3076 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.2022-23 நிதியாண்டில் 3 ஆயிரத்து 96 கோடி ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் 1000 கோடி ரூபாய், தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் நிரந்தர வாய்ப்புகள் மூலம் வருமானமாக 668 கோடி ரூபாய், பிரசாத விற்பனை மூலம் ரூ 365 கோடி ரூபாய்,
தரிசன டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 242 கோடி ரூபாய், தலைமுடி விற்பனை மூலம் ரூ 120 கோடி ரூபாயும், கட்டண சேவைகளை விற்பனை மூலம் 96 கோடி ரூபாய் ஆகியவை உள்ளிட்ட வகைகளில் தேவஸ்தானத்திற்கு 3 ஆயிரத்து 96 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஊழியர்களின் ஊதியத்திற்கு 1306 கோடி ரூபாய், பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ய 489 கோடி ரூபாய் ஆகியவ்சி உள்ளிட்ட வகைகளில் செலவு போக மீதி 6 கோடியே இரண்டு லட்சம் ரூபாய் இருப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.