நாடு முழுவதும் நாடாளுமனற் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து 7-ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் பீகார் மாநிலம் பக்சார் தொகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை தங்களுடைய சொத்தாகவும், தங்கள் இளவரசரை(ராகுல் காந்தி) அதன் வாரிசாகவும் கருதுகிறது.
5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் வருவார்கள் என ‘இந்தியா’ கூட்டணி கூறுகிறது. இவ்வளவு பெரிய நாட்டை இப்படி வழிநடத்த முடியுமா? அவர்களது கலாசாரத்தில் ஊழல் ஊறிப்போய்விட்டது.
தங்கள் வாக்கு வங்கியை திருப்திபடுத்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணி எதை வேண்டுமானாலும் செய்யும். முஸ்லிம்களுக்கே இந்த நாட்டில் முன்னுரிமை இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேலும் படிக்க: லாரி ஓட்டுநரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பல் : சிசிடிவிவை வைத்து சேஸ் செய்த போலீஸ்.!!
500 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் கனவுகள் நனவாகும் வகையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. பக்சார் பகுதியில் இருந்து மக்கள் ராமருக்காக பரிசுகளை அனுப்பிக் கொண்டிருந்தபோது, இந்த நாடே கொண்டாட்டத்தில் இருந்தபோது, சிலர் ராமர் கோவில் கும்பிஷேகத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டார்கள்.
‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அனைத்து புனித காரியங்களுக்கும் தடையை ஏற்படுத்துகிறார்கள் என கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.