திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு இண்டிகோ விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர், அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் எமர்ஜென்சி கதவை திடீரென திறக்க முயன்றார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, விமான பணிப்பெண்கள் விரைந்து வந்து அந்த பயணியை வேறு இருக்கையில் அமர வைத்தனர். இந்த சம்பவத்தால் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அகர்தலா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியை, விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் பிஸ்வஜித் தேப்நாத் என்பதும், சம்பவத்தின் போது அவர் போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.