தெலுங்கானா : கூலித் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் சாயம்பேட்டை மண்டலம் மந்தாரபேட்டை அருகே கோர சாலை விபத்து ஏற்பட்டது. பத்திபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 கூலித்தொழிலாளர்கள் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம் மோகுள்ளபள்ளி மிளகாய்த் தோட்டத்தில் பணிபுரிய வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் 3 பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்க 7 பேர் தீவிர காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரகால போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வரங்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி வேலைக்கு என்று சக தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பத்தி பாக்கம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.