தெலுங்கானா : கூலித் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் சாயம்பேட்டை மண்டலம் மந்தாரபேட்டை அருகே கோர சாலை விபத்து ஏற்பட்டது. பத்திபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 கூலித்தொழிலாளர்கள் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டம் மோகுள்ளபள்ளி மிளகாய்த் தோட்டத்தில் பணிபுரிய வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் 3 பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்க 7 பேர் தீவிர காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரகால போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு வரங்கள் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூலி வேலைக்கு என்று சக தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பத்தி பாக்கம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.