ஆந்திரா : குவைத்தில் நடைபெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலையில் ஆந்திராவை சேர்ந்த டிரைவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடப்பா மாவட்டம் லக்கிரெட்டி பள்ளியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேஷ். 2018 ஆம் ஆண்டு குவைத் சென்ற அவர் அங்கு முகமது என்பவரிடம் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி சுவாதியை குவைத் வரவழைத்த வெங்கடேஷ் அங்கு வேறொரு வீட்டில் சுவாதியை பணியமர்த்தினார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வெங்கடேஷ் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் முகமது, அவருடைய மனைவி, மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த வைத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர் சுவாதியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று 6 நாட்கள் கொடுமையான விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுவாதி வேலை செய்த வீட்டு உரிமையாளரான வக்கீல் அவரை காவல் நிலையத்தில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி விட்டார். நாடு திரும்பிய சுவாதி தங்களுக்கும் 3பேர் கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறுகிறார்.
மேலும் கொலை செய்யப்பட்ட முகமதுவின் மனைவி தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை பணியமர்த்த வேண்டும் என்று கணவரிடம் அடிக்கடி கேட்டு வந்தார்.
இந்நிலையில் அவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டனர். எனவே நாங்கள் தான் கொலைசெய்து விட்டோம் என்று கருதி எங்களை போலீசார் கைது செய்தனர். நான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரின் முயற்சி காரணமாக என்னை போலீசார் காவல் நிலையத்தில் இருந்து விடுவித்தனர்.
என்னுடைய கணவரையும் விடுவிக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடப்பா மாவட்ட ஆட்சியரிடம் கோரி சுவாதி மனு அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.