அதிசய நிகழ்வாக வானில் நிலாவுக்கு பின் வெள்ளி மறையும் நிகழ்வை பொதுமக்கள் ஆச்சர்யமாக கண்டுரசித்தனர்.
விண்ணில் உள்ள கோள்கள் நகர்ந்து வருகையில், சில சமயங்களில் அதிசயமாக நேருக்கு நேர் சந்திப்பதும், அருகாமையில் வட்டமிடுவதும் அதிசயமான நிகழ்வாகும். அந்தவகையில், நேற்று வெள்ளி மற்றும் வியாழன் கோள்கள் நிலாவுக்கு அருகில் வந்தது. முக்கிய கோள்கள் நெருங்கி இருக்கும் அரிய நிகழ்வு உலகின் பல்வேறு நாடுகளில் தென்பட்டிருக்கும்.
நிலவின் இருண்ட பாகத்திற்கு பின்புறம், வெள்ளி மெதுவாக மறைந்தது. இந்த நிகழ்வின் போது இரண்டும் ஒரே நேர்கோட்டில் இருந்தது. மாலை நேர வானில் உள்ள பிரகாசமான கோள்களி்ல் ஒன்று வெள்ளி என்றாலும், நிலவின் பின்னால் ஒளிவதால் அதன் பிரகாசம் மேலும் 250 மடங்கு உயர்த்தி அழகாக காட்சியளித்தது.
இதைப்போல, இதுவரை நடந்திடாத அரிய நிகழ்வு ஒன்று அடுத்த வாரம் நடக்க இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய 5 கோள்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய நிகழ்வு நடைபெற இருப்பதாகவும், அநேகமாக வரும் 28ம் தேதி இந்த அரிய நிகழ்வு நடைபெறவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அந்த 5 கோள்களும், வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தென்படும் என்றும், இந்த நிகழ்வை அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.