மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோர் மாவட்டம் பதாமி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் சித்தராமையா. இவர் தனது தொகுதியில் நடந்த மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
ஆனால், அவர் வழங்கிய பணத்தை பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், அதனை சித்தராமையா செல்லும் வாகனத்தின் மீது தூக்கி ஏறிந்து, தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது, பணம் எங்களுக்கு வேண்டாம், சட்டம் ஒழுங்கு சீரடைந்து, அமைதி திரும்பினால் போதும் என்று கூறினார்.
அந்த சமயம் காரில் அமர்ந்தவாறு, அந்தப் பெண்ணின் கையை பிடித்துக் கொண்டு சமாதானம் செய்ய சித்தராமையா முயன்றார். ஆனால், அவர் பணம் வேண்டாம் எனக் கூறி வாகனத்தின் பின்னால் தூக்கி எறிந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கச் சென்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அவமதிக்கப்பட்டது, அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.