மறுபடியும் முதல்ல இருந்தா? பரவும் அரிய வகை கொரோனா : அறிகுறிகள் இதுவா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஊரடங்கு, மாஸ்க், பாதிப்பு, பலி என கொரோனா கால வாழ்க்கையை மக்கள் இப்போது தான் மறந்து வருகின்றனர்.

ஆசுவாசப்படுத்தி வரும் நிலையில் மக்களை மீண்டும் கவலைக்குள் ஆழ்த்த கொரோனா புதிய திரிபான eris குறித்த செய்தி குழப்பத்தை விளைவித்துள்ளது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜுலையில் 70ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி 115ஆக அதிகரித்தது. மே மாதம் இந்த புதிய திரிபு கண்டறியபட்டது.

இரண்டு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் கவனிக்கும்படியாக எந்த வித மாற்றத்தையும் இந்த திரிபு கொண்டுவரவில்லை. ஆனால் கோவிட் பாதிப்பாலும், தடுப்பூசியாலும் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி சற்று குறைந்திருக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையோடு இதை அணுகுவது நல்லது என்கின்றனர் சில மருத்துவர்கள்.

மருத்துவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம் உள்ளது. முதலில் பிரிட்டனில் தான் இந்த திரிபு கண்டுபிடிக்கபட்டது. அந்நாட்டில் மூத்த குடிமக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவில் இந்த பாதிப்பு இருந்தது.

இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையோடு அணுக வேண்டும் எனவும், பூஸ்டர் ஷாட்களை எடுத்துகொள்ளவெண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புதிய மாறுபாடு குறித்த கவலை என்பது பல காரணிகளை அடிப்படையாக கொண்டது. முதலில் அதன் பரவும் தன்மை, அடுத்து அதன் தீவிரம் இறுதியாக அவற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் செயல்திறன் ஆகியவற்றை பொருத்தது.

வைரஸ்கள் பொதுவாகவே உருமாறும் திறன் கொண்டது என்பதால் புதிய திரிபு வருவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே உண்டு. இப்போதைய உருமாற்றம் அடைந்த eris வகை உலக சுகாதார அமைப்பால் உற்றுநோக்கப்பட்டுவருகிறது. இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி குறைந்து வருகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, இருமல்,காய்ச்சல், உள்ளிட்டவையே இவற்றின் அறிகுறிகளாக உள்ளன. பொதுவாக உருமாறும் திரிபுகள் அதிகம் பரவக்கூடியவையாக இருக்கும். ஆனால் இது ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் கருதலாம். இருப்பினும் சுகாதாரமாக இருப்பது, முககவசம் அணிதல், வெளியே சென்று வந்தால் முறையாக கை கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது முன்னெச்சரிக்கையாக பலன் தரும். தவிர டெங்கு, மலேரியா போன்ற பிற காய்ச்சல்களும் அதிகம் ஏற்படும் காலம் இது என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

10 minutes ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

30 minutes ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

50 minutes ago

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

1 hour ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

This website uses cookies.