மறுபடியும் முதல்ல இருந்தா? பரவும் அரிய வகை கொரோனா : அறிகுறிகள் இதுவா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

ஊரடங்கு, மாஸ்க், பாதிப்பு, பலி என கொரோனா கால வாழ்க்கையை மக்கள் இப்போது தான் மறந்து வருகின்றனர்.

ஆசுவாசப்படுத்தி வரும் நிலையில் மக்களை மீண்டும் கவலைக்குள் ஆழ்த்த கொரோனா புதிய திரிபான eris குறித்த செய்தி குழப்பத்தை விளைவித்துள்ளது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஜுலையில் 70ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி 115ஆக அதிகரித்தது. மே மாதம் இந்த புதிய திரிபு கண்டறியபட்டது.

இரண்டு மாதங்களை கடந்துவிட்ட நிலையில் கவனிக்கும்படியாக எந்த வித மாற்றத்தையும் இந்த திரிபு கொண்டுவரவில்லை. ஆனால் கோவிட் பாதிப்பாலும், தடுப்பூசியாலும் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி சற்று குறைந்திருக்கும் என்பதால் இந்தியா எச்சரிக்கையோடு இதை அணுகுவது நல்லது என்கின்றனர் சில மருத்துவர்கள்.

மருத்துவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம் உள்ளது. முதலில் பிரிட்டனில் தான் இந்த திரிபு கண்டுபிடிக்கபட்டது. அந்நாட்டில் மூத்த குடிமக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவில் இந்த பாதிப்பு இருந்தது.

இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையோடு அணுக வேண்டும் எனவும், பூஸ்டர் ஷாட்களை எடுத்துகொள்ளவெண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

புதிய மாறுபாடு குறித்த கவலை என்பது பல காரணிகளை அடிப்படையாக கொண்டது. முதலில் அதன் பரவும் தன்மை, அடுத்து அதன் தீவிரம் இறுதியாக அவற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின் செயல்திறன் ஆகியவற்றை பொருத்தது.

வைரஸ்கள் பொதுவாகவே உருமாறும் திறன் கொண்டது என்பதால் புதிய திரிபு வருவதற்கான வாய்ப்புகள் எப்போதுமே உண்டு. இப்போதைய உருமாற்றம் அடைந்த eris வகை உலக சுகாதார அமைப்பால் உற்றுநோக்கப்பட்டுவருகிறது. இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம் தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட எதிர்ப்பு சக்தி குறைந்து வருகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, இருமல்,காய்ச்சல், உள்ளிட்டவையே இவற்றின் அறிகுறிகளாக உள்ளன. பொதுவாக உருமாறும் திரிபுகள் அதிகம் பரவக்கூடியவையாக இருக்கும். ஆனால் இது ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் கருதலாம். இருப்பினும் சுகாதாரமாக இருப்பது, முககவசம் அணிதல், வெளியே சென்று வந்தால் முறையாக கை கழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவது முன்னெச்சரிக்கையாக பலன் தரும். தவிர டெங்கு, மலேரியா போன்ற பிற காய்ச்சல்களும் அதிகம் ஏற்படும் காலம் இது என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.