நடிகர் பிரகாஷ்ராஜ் வந்தால் தீட்டா? கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள்.. பரபரப்பு!!

நடிகர் பிரகாஷ்ராஜ் வந்தால் தீட்டா? கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்களால் பரபரப்பு!!

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து திரையரங்கு, சினிமா, சமுதாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர்.

இதில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் சந்திரசேகர் அய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, தனியார் அமைப்புகளுக்கு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவர்கள் பிரகாஷ்ராஜிடம் இருந்து கற்று கொள்ள எதுவும் இல்லை எனக் கூறி பாஜகவினரும், பாஜக மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் கோஷங்களை எழுப்பினர்.

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கல்லூரிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ள ஐந்து திட்டங்களை ஆதரித்து பேசினார்.

காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு பயனளிக்கின்றன என்றார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார்.

பிரதமர் மோடியின் திட்டங்கள் நாடு முழுவதும் தோல்வியடைந்துவிட்டன, அதைப் பற்றி யார் பேசுவார்கள் என்றும் பிரகாஷ் ராஜ் கூறினார்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களை மாற்றியமைக்கும் அரசாங்கங்கள் பற்றியும் நடிகர் பேசினார். பாடப்புத்தகங்களை மாற்றுவது மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ்ராஜ் வெளியே சென்ற பின்னர், கருத்தரங்கு நடந்த அரங்கை பாஜக மாணவர் அமைப்பினர் சிலர், பசு மாட்டின் கோமியத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர்‌. பாஜக மாணவர் அமைப்பினர் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.