திருப்பதி மலையில் அமைச்சர் ரோஜாவை சூழ்ந்து எதிர்ப்பு கோஷம் போட்டு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு பெண்கள் அதிருப்தி தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா இன்று திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நிலையில், கோவிலில் இருந்து வெளியில் வந்த அவரை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்ய வந்திருக்கும் பெண் தன்னார்வலர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, அவர்களில் சிலர் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அபிவிருத்தி செய்ய வற்புறுத்தி “ஜெய் அமராவதி” என்று கோஷம் எழுப்பினர்.
மேலும் ஜெய் அமராவதி என்று கோஷம் எழுப்புமாறு ரோஜாவையும் அவர்கள் கேட்டு கொண்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது . ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சி பொறுப்புக்கு வந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்து தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதனால். அப்போது முதல் ஜெய் அமராவதி என்று தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று கூறி அமைக்க தவறிவிட்டார். ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமராவதியை தலைநகராக அபிவிருத்தி செய்வோம் என்று கூறும் தெலுங்கு தேசம் கட்சியினர் ஜெய் அமராவதி என்பதை அரசியல் கோஷமாக மாற்றி கோஷம் எழுப்பி வருகின்றனர்.
திருப்பதி மலைக்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த ரோஜாவை சூழ்ந்த தன்னார்வலர்கள் தெலுங்கு தேசம் கட்சியினர் எழுப்பும் கோஷத்தை எழுப்பியது விவாத பொருளாக மாறி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.