வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பவுலர் உம்ரான் மாலிக் எடுத்த விக்கெட் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், வங்கதேச அணியை திணறடித்தனர்.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அனமுல் (11), லிட்டன் தாஸ் (7) ஆகியோரின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, நிதானமாக ஆடி வந்த ஷாண்டோவின் விக்கெட்டை உம்ரான் கைப்பற்றியது சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.
இந்திய அளவில் அதிக வேகம் வீசக்கூடிய பவுலரான மாலிக், ஷாண்டோவின் விக்கெட்டை கைப்பற்றிய பந்தை 151 KMPH வேகத்தில் வீசியுள்ளார். அதிவேகமான பந்து பட்டதில் ஸ்டாம்ப் தெறித்துக் கொண்டு போய் விழுந்துள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பாராட்டி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.