ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மோசமான தோல்வியை தழுவியது.
ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குஜராத் அணியின் பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். தொட்டது எல்லாம் துலங்கும் என்பதை போல எந்தப் பந்தை வீசுனாலும் விக்கெட் மழையாகவே இருந்தது.
அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே, அதிகபட்சமாக 30 ரன்களை குவித்தார். போல்ட் 15 ரன்களும், ஜெய்வால் 14 ரன்களும், படிக்கல் 12 ரன்களும் குவித்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருண்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது 2வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முன்னதாக லக்னோ அணி ஆர்சிபிக்கு எதிராக 108 ரன்களை எடுத்தது குறைந்தபட்ச ஸ்கோராக இருக்கும்.
குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுக்களும், நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, ஹர்திக் பாண்டியா, லிட்டில் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சஹா – கில் அதிரடியாக விளையாடினர். கில் 36 ரன்னில் ஆட்டமிழந்தாலும், சஹா (41 நாட் அவுட்) மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா (39 நாட் அவுட்) சிறப்பாக விளையாடி 13.5 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இதன்மூலம், குஜராத் அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான், மோசமான சாதனையை படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் ( 9 விக்கெட்) மற்றும் அதிக பந்துகள் (37 பந்துகள்) வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.