மீண்டும் No.1 அணி என்பதை நிரூபித்த குஜராத்… மோசமான சாதனையை படைத்த ராஜஸ்தான்… அதுவும் இந்த சீசனில் முதல்முறையாமா..?

Author: Babu Lakshmanan
6 May 2023, 9:43 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மோசமான தோல்வியை தழுவியது.

ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குஜராத் அணியின் பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். தொட்டது எல்லாம் துலங்கும் என்பதை போல எந்தப் பந்தை வீசுனாலும் விக்கெட் மழையாகவே இருந்தது.

அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே, அதிகபட்சமாக 30 ரன்களை குவித்தார். போல்ட் 15 ரன்களும், ஜெய்வால் 14 ரன்களும், படிக்கல் 12 ரன்களும் குவித்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருண்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது 2வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முன்னதாக லக்னோ அணி ஆர்சிபிக்கு எதிராக 108 ரன்களை எடுத்தது குறைந்தபட்ச ஸ்கோராக இருக்கும்.

குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுக்களும், நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, ஹர்திக் பாண்டியா, லிட்டில் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சஹா – கில் அதிரடியாக விளையாடினர். கில் 36 ரன்னில் ஆட்டமிழந்தாலும், சஹா (41 நாட் அவுட்) மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா (39 நாட் அவுட்) சிறப்பாக விளையாடி 13.5 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதன்மூலம், குஜராத் அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான், மோசமான சாதனையை படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் ( 9 விக்கெட்) மற்றும் அதிக பந்துகள் (37 பந்துகள்) வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

Views: - 331

0

0