உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நமிபியா : ஒரே ஒரு வார்த்தையில் பாராட்டிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்!!

டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணி , கத்துக்குட்டி அணியான நமிபியாவிடம் இன்று அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் கத்துக்குட்டி அணியுடனான நமிபியாவை இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஜென் பிராலிங், மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் நமிபியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் தடுமாறியது. நமிபியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இறுதியில் இலங்கை அணி 19-வது ஓவரில் 108 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியை நமிபியா அணி வீழ்த்தியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் நமிபியா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நமிபியா அணியை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.

இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று நமீபியா அணி, தங்கள் அணியின் பெயரை கிரிக்கெட் உலகம் நினைவில் கொள்ளுமாறு கூறியுள்ளதாக” பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

30 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

51 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

1 hour ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.