டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணி , கத்துக்குட்டி அணியான நமிபியாவிடம் இன்று அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் கத்துக்குட்டி அணியுடனான நமிபியாவை இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.
ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஜென் பிராலிங், மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் நமிபியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் தடுமாறியது. நமிபியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இறுதியில் இலங்கை அணி 19-வது ஓவரில் 108 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியை நமிபியா அணி வீழ்த்தியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் நமிபியா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நமிபியா அணியை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.
இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று நமீபியா அணி, தங்கள் அணியின் பெயரை கிரிக்கெட் உலகம் நினைவில் கொள்ளுமாறு கூறியுள்ளதாக” பதிவிட்டுள்ளார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.