பிரபல விளையாட்டு தம்பதிகளான சானியா மிர்ச – சோயப் மாலிக் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இஷான் என்னும் 4 வயது குழந்தை இருக்கிறது. திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு மேலாக ஆன நிலையில், தற்போது இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் மாலிக், சானியா மிர்சாவை ஏமாற்றியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரையில் உண்மை காரணம் ஏதும் வெளியாகவில்லை. இருவரும் கடந்த சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சானியா மிர்சாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன. அல்லாவை தேடி…” என்று பதிவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது மகனுடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:- “கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள்…” என்று பதிவிட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையேயான பிரச்சனையால் அவர்களின் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.