பெங்களூரூவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஷர்துல் தாகூரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி 204 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரூ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் (3), மந்தீப் சிங் (0), நிதிஷ் ரானா (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய குர்பாஷ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸலும் ரன் எதுவும் இன்றி அவுட்டானார். இதனால், கொல்கத்தா அணியின் நிலைமை அவ்வளவு தானா என்று சொல்லப்பட்டு வந்தது.
ஆனால், ஷர்துல் தாகூர், ரிங்கு சிங் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் சிக்சருக்கும், பவுண்டருக்கும் பந்துகளை பறக்கவிட்டனர். இதனால், 20 பந்துகளில் ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் அணி வீரர் பட்லரின் சாதனையை ஷர்துல் தாகூர் சமன் செய்தார்.
ஷர்துல் தாகூர் (68), ரிங்கு சிங் (46)வின் அதிரடியால் கொல்கத்தா அணி, பெங்களூரூவுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.