திருவாரூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை.மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சரண்ராஜ் என்கிற இளைஞர் கடந்த 2021 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரன்ராஜ் மீது பெண்ணை கடத்தி செல்லுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து சரண்ராஜ் பிணையில் வெளியில் வந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஜயக்குமார் குற்றவாளி சரண்ராஜீக்கு அதிகபட்ச தண்டனையாக 27 ஆண்டுகள் சிறை தண்டனையும்,நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் ஒரு வருடத்திற்குள் 27 ஆண்டுகள் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கிய திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
This website uses cookies.