Categories: தமிழகம்

10ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை…திருவாரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

திருவாரூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை.மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சரண்ராஜ் என்கிற இளைஞர் கடந்த 2021 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரன்ராஜ் மீது பெண்ணை கடத்தி செல்லுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சரண்ராஜ் பிணையில் வெளியில் வந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஜயக்குமார் குற்றவாளி சரண்ராஜீக்கு அதிகபட்ச தண்டனையாக 27 ஆண்டுகள் சிறை தண்டனையும்,நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். 

இந்த வழக்கில் ஒரு வருடத்திற்குள் 27 ஆண்டுகள் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கிய திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். 

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

12 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

12 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

12 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

14 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

15 hours ago

This website uses cookies.