திருப்பூரில் 17 வயது சிறுவனை கடத்தி செல்போன் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது நண்பன் வீட்டிற்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த போது, வலையங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் அருகில் உள்ள ஒரு காலி இடத்திற்கு சிறுவனை அழைத்து சென்று கயிற்றால் கை, கால்களை கட்டிப் போட்டு, சிறுவனை தாக்கி அவனிடமிருந்த செல்போனை மற்றும் பணத்தை பறித்து விட்டு மூவரும் தப்பி சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் வீட்டிற்கு சென்ற சிறுவன் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து, பெற்றோருடன் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளான். இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கடத்திச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியதில், சாமுண்டிபுரத்தை சேர்ந்த சூர்யா (வயது 24), நவீன்குமார் (24), கோகுல் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுவனை கடத்திச் சென்றது தெரிய வந்தது.
மேலும் மூவரும் காந்திநகர் ஈபி காலனியில் இருப்பதை அறிந்த போலீசார் மூவரையும் கைது செய்து, மூன்று பேர் மீதும் கடத்தல், கொலைமிரட்டல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரில் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளது குறிப்பிடதக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.