Categories: தமிழகம்

நடுரோட்டில் காரை மறித்து தம்பதியை அடிக்க பாய்ந்த 2 பேர்… தடுக்க வந்த Ex கவுன்சிலர், எஸ்ஐக்கும் மிரட்டல் : பரபரப்பு!!!

நடுரோட்டில் காரை நிறுத்தி தம்பதியை அடிக்க பாய்ந்த 2 பேர்… தடுக்க வந்த கவுன்சிலர், எஸ்ஐக்கும் மிரட்டல் : பரபரப்பு!!!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே வடமதுரை பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து பன்னீர்மடை திரும்பும் சாலையில் TN38CA4833 என்ற பதிவு எண் கொண்ட ஹுண்டாய் வெர்னா கார் திரும்பியுள்ளது.

இதனை ஸ்டீபன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் என தெரிகிறது. அவருடன் அவரது நண்பர் டோமினிக் பிரான்சிஸ் உடன் வந்துள்ளார்.

அப்போது பன்னீர்மடை சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் திரும்புவதற்காக தார் ஜீப் வந்துள்ளது. இதனை துடியலூர் காளியம்மாள் காலனியைச் சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார் உடன் அவரது மனைவி வந்துள்ளார்.

அப்போது வடமதுரை ஜங்சனில் ஜீப் காரில் மோதுவது போல் வந்தாகக் கூறி காரில் இருந்து இறங்கி வந்த ஸ்டீபன் மற்றும் டோமினிக் பிரான்சிஸ் ஆகிய 2 பேரும் ஜீப்பை ஓட்டிவந்த செந்தில்நாதனை கீழே இறங்கச் சொல்லி நடுரோட்டில் சட்டையைப் பிடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

கணவரை அடிப்பதைப் பார்த்து செந்தில்நாதனில் மனைவி அவர் முன்பு அரணாக நின்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் ரவுடிகளைப் போல் அவரையும் மீறி மீண்டும் மீண்டும் தாக்கிக்கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கோவை மாவட்ட Exகவுன்சிலர் கவி சரவணகுமார் ஆகியோர் அவர்களை தடுக்க முட்பட்டனர். ஆனால் அவர்களை தாக்கியும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டினர்.

அவர் மாவட்ட கவுன்சிலர் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்தும் நீ யார்டா நீ யார்டா எனக்கூறி கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி அடிக்கப் பாய்ந்தனர். மேலும் நாங்களும் கட்சிக் காரங்கதான் என்று மிரட்டல் விடுத்தனர்.

அப்போது அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களை தடுத்து நிறுத்தி இருதரப்பினரையும் காவல் நிலையம் வரச் சொன்னபோது ஸ்டீபன் மற்றும் டோமினிக் இருவரும் காரை எடுக்காமல் ஜீப்பை எடுக்கச் சொல்லி காவல் உதவி ஆய்வாளரையும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?

ஆப்ரேஷன் சிந்தூர்  பஹல்காம் தாக்குதல் இந்தியர்களாகிய நம் அனைவரையும் உலுக்கிய சம்பவம் என்பதை நாம் மறந்திருக்க முடியாது. பயங்கரவாதிகளின் தாக்குதலால்…

25 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்…25 நிமிடங்களில் பாகிஸ்தானை பழி தீர்த்த இந்தியா… என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே…

39 minutes ago

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

17 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

18 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

18 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

19 hours ago

This website uses cookies.