கும்பகோணத்தில் போதைக்காக சானிடைசர் குடித்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி சக்கரபடிதுறையில் மர்மமான முறையில் இருவர் இறந்து கிடப்பதாக இக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், காவிரி சக்கரபடி துறையில் அமர்ந்து கருணகொல்லைத் தெருவை சேர்ந்த சௌந்தர்ராஜன் (42), பாலக்கரை பெருமாண்டி தெருவை சேர்ந்த பாலகுரு(43) உட்பட நான்கு பேர் நேற்று மாலை அமர்ந்துள்ளனர். அப்போது, சௌந்தர்ராஜன் மற்றும் பாலகுரு தண்ணீரில் சானிடைசர் கலந்து குடித்துள்ளனர். இதனைப் பார்த்த ஒருவர் சானிடைசர் குடித்தால் இறந்து விடுவாய் என எச்சரித்துள்ளார்.
இருப்பினும் இருவரும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து குடித்தால் ஒன்னும் ஆகாது என போதைக்காக குடித்துள்ளனர். மேலும், சிரஞ்சீவி மூலமாக சானிடைசரை உடலில் ஏற்றியதாகவும் முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சானிடைசர் குடித்து இறந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைக்காக சனிடைசர் கலந்து குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.