Categories: தமிழகம்

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் +2 மாணவி தற்கொலை : சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியல்!!

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம் என்ற விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகளான 17 வது மாணவி திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம் போல இன்று காலை பள்ளி சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில் தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவறிந்து வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு கருதி போலீசார் மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் காலனி, தூக்கிட்டு கொண்ட கீழச்சேரி தனியார் விடுதி, மாணவியின் சடலும் வைக்கப்பட்டுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது சொந்த ஊரான திருத்தணி தெக்கலூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடங்குவதற்கள் அடுத்தடுத்து பள்ளி மாணவிகளின் மரணம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

11 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

12 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

12 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

13 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

14 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

14 hours ago

This website uses cookies.