ராணிப்பேட்டை ; நெமிலி அருகே ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு பணம் முதலீடு செய்த 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர்களில் ஒருவரான ஜெகன் என்பவரின் வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் திடீரென குவிந்தனர். ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகநாதன் ஜாமினில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஜெகநாதன் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்பொழுது ஆவேசமடைந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.
தகவல் அறிந்த நெமிலி காவல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு வாலிபர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.