ராணிப்பேட்டை ; நெமிலி அருகே ஐ எஃப் எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு பணம் முதலீடு செய்த 2 பேர் தீக்குளித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி யில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர்களில் ஒருவரான ஜெகன் என்பவரின் வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் திடீரென குவிந்தனர். ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகநாதன் ஜாமினில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஜெகநாதன் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்பொழுது ஆவேசமடைந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.
தகவல் அறிந்த நெமிலி காவல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு வாலிபர்கள் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தின் உதவியாளர் வீட்டின் முன்பு இரண்டு நபர்கள் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.