திருச்சி : முதல் நாள் சமைத்த நூடுல்சை சாப்பிட்ட 2 வயது குழந்தை பலியான நிலையில் உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், நெ1 டோல்கேட் அடுத்துள்ள தாளக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் – மகாலெட்சுமி தம்பதி. இவர்களது 2வயது ஆண் குழந்தை சாய்தருண்.
சாய்தருணிற்கு நேற்று இரவு தாய் மகாலெட்சுமி நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளார்.
மீதமுள்ள நூடுல்ஸை குளிர்சாதன பெட்டி வைத்தார். மீண்டும் இன்று காலையில் அதே நுாடுல்ஸை குழந்தைக்கு காலை உணவாக கொடுத்தார். இதனை சாப்பிட்டதை தொடர்ந்து குழந்தை மதியம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை குழந்தை திடீரென வாத்தி எடுத்து சுருண்டு கீழே விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மகாலெட்சுமி குழந்தையை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு குழந்தை நூடுல்ஸை உண்டதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.