Categories: தமிழகம்

தரிசனம் செய்ய சிறப்பு கவுன்ட்டரில் நின்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ.20 ஆயிரம் அபேஸ் : சமயபுரம் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!!

திருச்சி : தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா விராலிமலை ஒன்றியம் லெட்சுமணபட்டி ஊராட்சியில் உள்ள சின்னபாண்டுராம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 50).

விவசாயியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், காயஸ்ரீ என்ற மகளும், ஓம்பிராஷ் என்ற மகனும் உள்ளார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமணபட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார்.

நாளை இவருடைய மகன் பிறந்தநாளை முன்னிட்டு துணி எடுப்பதற்காக இருபதாயிரம் பணம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது சிறப்பு கவுண்டர் 100 ரூபாய் கட்டண தரிசன கவுண்டரில் டிக்கெட் எடுத்துவிட்டு வரிசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூ.20,000 பணத்தை பிளேடு போட்டு திருடிச் சென்றனர்.

மூலஸ்தானத்தில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உண்டியல் காசு போடுவதற்காக பாக்கெட்டில் கைவிட்ட போது பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது.

கோயில் வளாகத்துக்குள்ளையே பிளேடு போட்டு பணத்தை திருடி சென்றதால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிளேடு போட்டதில் அவருடைய வேஷ்டி மற்றும் டவுசர் பாக்கெட் கிழிந்திருந்தது.

இது குறித்து சமயபுரம் கோயில் பணியாளர்களிடம் அவர் முறையிட்டுள்ளார். ஆனால் கோயில் நிர்வாக பணியாளர்கள் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பச்சமுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

20 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

1 hour ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

2 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

2 hours ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

3 hours ago

This website uses cookies.