திருச்சி : தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா விராலிமலை ஒன்றியம் லெட்சுமணபட்டி ஊராட்சியில் உள்ள சின்னபாண்டுராம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 50).
விவசாயியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், காயஸ்ரீ என்ற மகளும், ஓம்பிராஷ் என்ற மகனும் உள்ளார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமணபட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார்.
நாளை இவருடைய மகன் பிறந்தநாளை முன்னிட்டு துணி எடுப்பதற்காக இருபதாயிரம் பணம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது சிறப்பு கவுண்டர் 100 ரூபாய் கட்டண தரிசன கவுண்டரில் டிக்கெட் எடுத்துவிட்டு வரிசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூ.20,000 பணத்தை பிளேடு போட்டு திருடிச் சென்றனர்.
மூலஸ்தானத்தில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உண்டியல் காசு போடுவதற்காக பாக்கெட்டில் கைவிட்ட போது பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது.
கோயில் வளாகத்துக்குள்ளையே பிளேடு போட்டு பணத்தை திருடி சென்றதால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிளேடு போட்டதில் அவருடைய வேஷ்டி மற்றும் டவுசர் பாக்கெட் கிழிந்திருந்தது.
இது குறித்து சமயபுரம் கோயில் பணியாளர்களிடம் அவர் முறையிட்டுள்ளார். ஆனால் கோயில் நிர்வாக பணியாளர்கள் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பச்சமுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
This website uses cookies.