22 வயதில் கவுன்சிலர் வேட்பாளரான சட்டக்கல்லூரி மாணவி: முன்னாள் அதிமுக மேயர் மகளை களமிறக்கிய காங்கிரஸ்…!!

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டில் தீபிகா என்ற 22 வயது சட்டக்கல்லூரி மாணவி போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 55 வது வார்டில் தீபிகா அப்புக்குட்டி என்ற பெண் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 வயது இளம்பெண் தீபிகா அப்புகுட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தீபிகா அப்புக்குட்டி திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்த விசாலாட்சியின் மகள் ஆவார். அதிமுக சார்பில் மேயராக பதவி வகித்த விசாலாட்சி, சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் தெற்கு தொகுயில் விசாலாட்சி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போதும் விசாலாட்சி அமமுகவில் தான் உள்ளார். தாய் அமமுகவில் இருக்கும் நிலையில், அவரின் மகள் தீபிகா அப்புகுட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 22 வயது ஆன தீபிகா அப்புகுட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து தீபிகா கூறுகையில், சிறு வயது முதலே இந்திரா காந்தி குறித்து புத்தகங்களில் படித்தேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். இதனால் அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதால் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

12 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

13 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

31 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

47 minutes ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

This website uses cookies.