Categories: தமிழகம்

பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க 24X7 காவல் காக்கும் தூய்மை பணியாளர்.. கோவை மாநகராட்சியில் அவலம்!!

பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க 24X7 காவல் காக்கும் தூய்மை பணியாளர்.. கோவை மாநகராட்சியில் அவலம்!!

கோவை மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டில் இபி காலனி, வி ஜி ராவ் நகர், ஆவாரம்பாளையம், இளங்கோ நகர், ஷோபா நகர், அம்பாள் நகர், சரஸ்வதி கார்டன் ஜெம் நிர்மாலயம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது.

இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் துப்புரவு பணியாளர்கள் தள்ளு வண்டியின் மூலம் சென்று குப்பைகளை எடுத்து வருகின்றனர்.

ஒரு சில பகுதிகளுக்கு அவ்வாறு செல்ல போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சாலையின் ஓரமாக உள்ள குப்பை தொட்டிகளில் தங்களது குப்பைகளை கொட்டி விட்டு செல்வது வழக்கம்.


இந்த 28 வது வார்டுக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பாரதி நகர் சாலையில் சரஸ்வதி கார்டனுக்கு செல்லும் வழியில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சாலை சக்தி ரோடு பகுதியிலிருந்து கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் செல்வதற்கு ஒரு இணைப்பு சாலையாக இருந்து வருகிறது .

இதன் காரணமாக இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டியில் பொதுமக்கள் போடும் குப்பைகள் விரைவில் நிறைந்து விடுவதால் பலர் குப்பைகளை குப்பைத் தொட்டியின் அருகிலேயே வீசிவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அப்படி சேரும் குப்பைகள் ஒரு சில நாட்கள் மாநகராட்சி லாரியின் மூலம் வந்து அகற்றிச் செல்வது வழக்கம். சில நேரம் அகற்றப்படாமல் மலை போல குவிந்து தேங்கி கிடப்பது உண்டு. இதனால் அப்பகுதியில் எப்பொழுதுமே ஒரு துர்நாற்றம் வீசி வரும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அப்பகுதியில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கும் விதமாக அங்கிருந்த குப்பை தொட்டிகளை திடீரென அகற்றினர்.

அங்கிருந்த குப்பைத் தொட்டியை அகற்றியதுடன் ஒரு அறிவிப்பு பலகையும் வைத்தனர். இங்கு யாரும் பொதுமக்கள் குப்பையை கொட்ட கூடாது என்றும் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அப்பகுதியில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கெல்லாம் மேலாக ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர் மூர்த்தி என்பவரை கடந்த ஐந்து நாட்களாக இரவும் பகலும் அங்கேயே காவலுக்கு அமர்த்தி வைத்திருக்கின்றனர்.

52 வயதாகும் மூர்த்தி கடந்த ஐந்து நாட்களாக அங்கேயே ஒரு பழைய கிழிந்து போன சோபாவில் திறந்தவெளியில் இரவும் பகலுமாக அமர்ந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது .

அப்போதும் யாரும் குப்பை போடாமல் காவல் காக்கும் மூர்த்திக்கு எந்த விதமான மழைக்கு ஒதுங்கும் வசதி கூட யாரும் செய்து தரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

இதுகுறித்து துப்புரவுப் பணியாளர் மூர்த்தியிடம் பேசியபோது பொதுமக்கள் யாரும் இங்கு குப்பை கொட்ட கூடாது என்பதற்காக என்னை காவலுக்கு வைத்திருக்கிறார்கள்.

கொசுக்கடியிலும் ,சாக்கடை ஓரத்தில் இருப்பதால் கடுமையான துர்நாற்றத்திலும் 5 நாட்களுக்கு மேலாக இங்கேயே அமர்ந்திருப்பதாக கூறுகிறார். இன்று ஆறாவது நாளாக அதே இடத்தில் மூர்த்தி அமர்ந்து யாரும் குப்பைகள் கொட்டாமல் கண்காணித்து வருகிறார்.

உற்றார் உறவினர் யாருமில்லாத ஆதரவில்லாதவர்கள் கூட இரவில் தூங்க வேண்டும் என்பதற்காக அரசு ஆதரவற்றோர் காப்பகத்தை நடத்தி வருகிறது . ஒப்பந்த துப்புரவு பணியாளராக மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வாங்கி வரும் மூர்த்தியை கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக இரவும் பகலும் தொடர்ந்து பொதுமக்கள் குப்பை போடாமல் தடுப்பு காவல் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது அப்பகுதியில் சாலையில் செல்லும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறிதளவும் மனிதாபிமானம் இல்லாமல் ஒரு மனிதனை கொடுமைப்படுத்தும் விஷயமாக இது இருக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

சம்பள உயர்வு ,ஒப்பந்த பணியாளர்களின் பணியை நிரந்தரமாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் துப்புரவு பணியாளர் சங்கங்கள் இதுபோல நடக்கும் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

36 minutes ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

56 minutes ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

2 hours ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

2 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

3 hours ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

4 hours ago

This website uses cookies.