விழுப்புரம் : சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் தஞ்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 நபர்கள் கோவில் பள்ளிக்கூடம் எதிரில் சமைத்து சாப்பிட்டு உறங்குவதும் என வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடும்ப அட்டை, பேங்க் புக், ஆதார்கார்டு ஓய்வுதியம் வழங்கப்பட்டது.
வருவாய் துறை சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே தங்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியேற கூறியதால் அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள புளிய மரத்தில் தஞ்சமடைந்தனர்.
மேலும் பள்ளியில் படித்துவந்த சிறுமியை சக மாணவர்கள் வெளியேற்றியது கண்ணீர் மல்க அழுதுகொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இதனை அடுத்து திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சின்னசெவலை கிராமத்தில் பல வருடங்களாக தங்கி இருப்பதாகவும் நாங்கள் தங்குவதற்கும் எங்களின் குழந்தைகள் பள்ளியில் படிப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு வந்து விட்டோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும் வீடும் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
விரைவில் பட்டா வழங்குவதாகவும் அதுவரைக்கும் ஆலங்குப்பம் பகுதியில் தங்குமாறும் தாசில்தார் கூறினார். அதன் பிறகு அவர்கள் ஒப்புக்கொண்டனர். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.