Categories: தமிழகம்

கோவையில் 40 வயதுக்கு மேற்பட்ட திருமணமான 3 ஆண்கள் அடுத்தடுத்து மாயம் : காவல் நிலையத்தில் மனைவிகள் புகார்!!

கோவை : கோவையில் வெவ்வேறு இடங்களில் திருமணமான 3 ஆண்கள் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43). கூலித்தொழில் செய்து வருகிறார். கடந்த 18ம் தேதி இவர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுள்ளார்.

மேலும், மாலை 6 மணிக்கு தனது மனைவி புஷ்பாவுக்கு போனில் அழைத்து விடு திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை தேடி வருகின்றனர்.

அன்னூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 44). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார். இந்த சூழலில் நேற்று வீட்டில் யாரிடமும் கூறாமல் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது மனைவி தனலட்சுமி. லோகநாதனைப் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமானவரை தேடி வருகின்றனர்.

பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 46). உடல் நலக்குறைவால் இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 12ம் தேதி பச்சாபாளையம் முருகன் கோவில் அருகே அமர்ந்திருந்த இவர் திடீரென மாயமானது,

இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி பேரூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான வடிவேலை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

16 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

40 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

5 hours ago

This website uses cookies.