கோவை : கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து குருவி சுடும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கோவை லங்கா கார்னர் பகுதியில் 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ரோந்து போலீசார் அவ்வழியாக வந்த பொழுது அவர்களை பிடித்து விசாரித்து இருக்கின்றனர். மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவர்கள் மூன்று பேரையும் தணிக்கை செய்திருக்கின்றனர். ரோந்து போலீசாரின் தணிக்கையின் போது அவர்களிடமிருந்து குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தன.
உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில், மூன்று நபர்களும் கூலி தொழிலாளிகள் என்பது தெரிய வந்தது. சமயபுரம் பகுதி சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் கர்நாடகாவில் கட்டிட வேலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
தற்பொழுது கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது குருவி சுடும் பழக்கம் உடைய இவர்கள், குருவி சுடுகின்ற துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என நினைத்திருக்கின்றனர்.
முன்னதாகவே ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்ற ரோந்து போலீஸாரால் மூன்று பேரும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போலீசார் கைதான நபர்களிடமிருந்து குருவி சுடுகின்ற துப்பாக்கி, பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மூவரை சிறையில் அடைத்திருக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.