தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் 120க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் காதலிப்பதாக ஏமாற்றியதோடு, பணமோசடி, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்ற காசி என்பவரை கடந்த 2020ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி வழக்கு என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஆவணங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, காசி லேப்டாப், மொபைலில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்ததாகவும் மேலும் 400 ஆபாச வீடியோக்கள் லேப்டாப்பில் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது.
காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளனர்.120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவிட்டது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.