சின்னாளபட்டியில் வாஷிங் மெஷினுக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த கலைமகள் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்க்குள் பாம்பு ஒன்று இருப்பதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புனித்ராஜ், வீரர்கள் அழகேசன், கார்த்திகேயன் , திருமூர்த்தி மற்றும் தங்கராஜ் ஆகியோர் கொண்ட மீட்பு படையினர் மணிகண்டன் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடியதில் அவரது வீட்டில் இருந்த பழைய வாஷிங் மெஷினுக்குள் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து வாஷிங் மெஷினை அப்படியே வெளியில் தூக்கி வந்து தேடினர். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த பாம்பு தப்பியோட முயன்றது.
ஆனால், சாமர்த்தியமாக தீயணைப்பு வீரர்கள் அதனை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு கொடிய விஷமுள்ள ஐந்து அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகை பாம்பு என மீட்புபடையினர் தெரிவித்தனர்.
பின்னர் அந்த பாம்பினை சாக்கு பையில் போட்டு கட்டி அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.