சின்னாளபட்டியில் வாஷிங் மெஷினுக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த கலைமகள் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்க்குள் பாம்பு ஒன்று இருப்பதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புனித்ராஜ், வீரர்கள் அழகேசன், கார்த்திகேயன் , திருமூர்த்தி மற்றும் தங்கராஜ் ஆகியோர் கொண்ட மீட்பு படையினர் மணிகண்டன் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடியதில் அவரது வீட்டில் இருந்த பழைய வாஷிங் மெஷினுக்குள் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து வாஷிங் மெஷினை அப்படியே வெளியில் தூக்கி வந்து தேடினர். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த பாம்பு தப்பியோட முயன்றது.
ஆனால், சாமர்த்தியமாக தீயணைப்பு வீரர்கள் அதனை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு கொடிய விஷமுள்ள ஐந்து அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகை பாம்பு என மீட்புபடையினர் தெரிவித்தனர்.
பின்னர் அந்த பாம்பினை சாக்கு பையில் போட்டு கட்டி அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.