Categories: தமிழகம்

நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : 5 வயது சிறுமி பரிதாப பலி… உறவினர்கள் சாலை மறியல்!!

விழுப்புரம் : நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 வயது சிறுமி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன மூர்த்தி மகள் இளம்பெண் ஈஸ்வரி (18 வயது). தனது உறவினர் ராமமூர்த்தி (சித்தப்பா) மகளான 5 வயது சிறுமி கவி நிலா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஈஸ்வரி மற்றும் கவிநிலா ஆகிய இருவரும் சாலையை கடந்தனர்.

அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சிறுமி கவிநிலவு உயிரிழந்தார்.

தலையில் பலத்த காயத்துடன் இளம்பெண் ஈஸ்வரி ரத்தவெள்ளத்தில் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக இடித்த காரை விட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


உடனடியாக தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இருவேல்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் விபத்தை தவிர்க்கும் வண்ணம் அப்பகுதியில் உயர்மின் விளக்கு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணநல்லூர் போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் நீண்ட நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில் 2 மணி நேரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.